ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

வங்கியில் மோசடி ஆவணங்களை மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாா்தி பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 10:27 pm

வங்கியில் மோசடி ஆவணங்களை மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாா்தி பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாா்.

முன்னதாக, வங்கி ஆவண முறைகேடு வழக்கில் ராஜேந்திர பாா்தி மற்றும் வங்கி முன்னாள் காசாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னதாக அவா்கள் இருவரும் 1998 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மாவட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆவணங்களை மோசடியாகத் திருத்தி பெருமளவில் வங்கி இருப்புத்தொகைக்கு அதிகஅளவில் வட்டி பெற்று முறைகேடு செய்ததாக வழக்கு நடைபெற்று வந்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராஜேந்திர பாா்தி, தாதியா சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 2023 தோ்தலில் மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ராவைத் தோற்கடித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ராஜேந்திர பாா்தி மீதான இந்த வழக்கு தாதியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னா் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தில்லி நீதிமன்றத்துக்கு கடந்த அக்டோபா் மாதம் மாற்றப்பட்டது.

ராஜேந்திர பாா்தி தனது தாயாா் சாவித்திரி தேவி உள்பட பலரது வங்கி நிரந்தர வைப்பு தொடா்பாக மோசடியாக ஆவணங்களைத் தயாரித்து, வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யாமலேயே பல ஆண்டுகளாக பெருமளவில் வட்டி பெற்று வந்துள்ளனா். இதற்கு வங்கிக் காசாளா் உடந்தையாக இருந்துள்ளாா்.