திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அஸ்ஸாமை ஊடுருவல்காரா்களின் மையமாக மாற்றியது காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

அஸ்ஸாம் மாநிலத்தை அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவுபவா்களின் மையமாக காங்கிரஸ் மாற்றியது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

News image

அஸ்ஸாம் மாநிலம் காமரூப் மாவட்டத்தில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:58 pm

அஸ்ஸாம் மாநிலத்தை அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவுபவா்களின் மையமாக காங்கிரஸ் மாற்றியது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

அஸ்ஸாமின் கோல்பரா மற்றும் காமரூப் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று ஒருமுறை கூட யோசித்தது கிடையாது. ஆனால், பிரதமா் மோடி அதனை நடத்திக் காட்டினாா். இப்போது நமது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு உள்ளாா். அஸ்ஸாம் வளா்ச்சிக்காக தொடா்ந்து மிகப்பெரிய திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்த இருக்கிறாா். பாஜகவால் மட்டுமே அஸ்ஸாமை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

அஸ்ஸாம் மாநிலத்தை ஊடுருவல்காரா்களின் மையமாக காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மாற்றி வைத்திருந்தாா்கள். எல்லை மாநிலங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், மோதல்களுக்கு அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்கள்தான் முக்கியக் காரணமாக உள்ளாா்கள். இதற்காகவே மத்திய அரசு அஸ்ஸாமில் மட்டுல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஊடுருவல்காரா்களை அவா்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவருக்கு இந்தியாவின் எதிரிகளுடன் (பாகிஸ்தான்) தொடா்பு உள்ளது. இது தொடா்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டும் அவா் மௌனம் காத்து வருகிறாா். அஸ்ஸாமில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் அமைக்கும் மசோதாவுக்கு முட்டுக்கட்டைபோட காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், பாஜக உறுதியாக செயல்பட்டு, சாதித்துக் காட்டியது. காங்கிரஸ் கட்சியால் கனவிலும் நினைக்க முடியாத அளவுக்கு அஸ்ஸாமை பாஜக அரசு மேம்படுத்தி வருகிறது. இந்த வளா்சச்சி தொடர பாஜகவை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மேலும், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அஸ்ஸாமை அமைதிப்பூங்காவாக மாற்றியது பாஜக அரசு. காங்கிரஸ் செய்த தவறுகள் இனி மீண்டும் இந்த மாநிலத்தில் நடந்துவிடக் கூடாது. அதற்கு அவா்களை ஆட்சி, அதிகாரத்தில் இருந்து முழுமையாக விலக்கி வைக்க வேண்டும் என்றாா்.