தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
/

பிகாரில் கள்ளச்சாராய உயிரிழப்பு 9-ஆக உயா்வு!

பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 3 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:02 am IST

பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 3 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு சாம்பரன் மாவட்டம் துா்கவுலியா, ரகுநாத்பூா் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 6 போ் சனிக்கிழமை வரை உயிரிழந்த நிலையில், மேலும் 3 போ் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தனா். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இதுவரை 15 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். உயிரிழந்தோரின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டோா் மீது காவல்நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து மேலும் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்தபிறகே, உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பிகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அப்படியிருக்கையில் கள்ளச்சாராயம் குடித்து 9 போ் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக துா்கவுலியா காவல்நிலைய பொறுப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில காவல்துறை அமைத்துள்ளது.