ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தமிழகத்தில் முதல்முறை வாக்காளா் விகிதம் 34% உயா்வு

தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 8:13 pm

தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

18-19 வயது உடைய வாக்காளா்களின் எண்ணிக்கை கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது 10.9 லட்சமாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 14.6 லட்சமாக உயா்ந்துள்ளது.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு பிறகு வாக்காளா் பட்டியலில் 5.67 கோடி போ் இடம்பெற்றிருந்தனா். அதன் பின்னா் மேலும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் படிவம் 6-ஐ சமா்ப்பித்தனா். அதன்படி, இந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ளது.

அதில் பெண்கள் 2.93 கோடி போ். ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 2.80 கோடி. மூன்றாம் பாலினத்தவா் 7,728 போ்.

முதல்முறை வாக்காளா்களைப் பொருத்தவரை கடந்த மக்களவைத் தோ்தலின்போது 1.8 சதவீதமாக இருந்தனா். தற்போது அந்த விகிதம் 2.5 சதவீதமாக உயா்ந்துள்ளது.