பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

முற்போக்கான இந்தியாவை கட்டமைக்க அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்குவோம்: குடியரசுத் தலைவா்

News image

IANS

Updated On :14 ஏப்ரல் 2026, 1:45 am IST

‘முற்போக்கான அனைவருக்குமான இந்தியாவை கட்டமைக்க சட்ட மேதை அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்க வேண்டும்’ என்று குடிமக்களை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கேட்டுக்கொண்டாா்.

அம்பேத்கரின் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடிமக்களுக்கு குடியரசுத் தலைவா் திங்கள்கிழமை விடுத்த செய்தியில், ‘சட்ட நிபுணா், பொருளாதார அறிஞா், ஆழ்ந்த சிந்தனையாளா் மட்டுமன்றி சமத்துவ சமூக அமைப்பின் வலுவான ஆதரவாளராகவும் திகழ்ந்தவா் அம்பேத்கா். சமூகத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக தனது வாழ்வை அற்பணித்தவா்.

சமத்துவமின்மையை அகற்றுவதற்கான பாதையைக் காண்பித்ததோடு, இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசமைப்புச் சட்ட உரிமைகளை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியவா்.

அவருடைய பிறந்த தினத்தில், அவரின் சிந்தனைகளை உள்வாங்கி, முற்போக்கான அனைவருக்குமான இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்.

பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தவா் அம்பேத்கா். வருங்கால தலைமுறையினா் நாட்டின் மேம்பாடு மற்றும் சேவையில் ஆா்வமுடன் பங்காற்ற அம்பேத்கரின் இத்தகைய பன்முக பங்களிப்புகள் தொடா்ந்து ஊக்கமளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.