இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

News image

உச்சநீதிமன்றம்

Updated On :14 ஏப்ரல் 2026, 4:36 am IST

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023-க்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராஜஸ்தானைச் சோ்ந்த மஸ்தூா் விவசாய சக்தி சங்கம், சமூக ஆா்வலா்கள் அருணா ராய், நிகில் டே, சங்கா் சிங் ராவத் ஆகியோா் சாா்பில், தகவல் பெறும் உரிமை (ஆா்டிஐ) சட்டப் பிரிவு 8(1)(ஜே)-க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவு 44(3)-க்கு எதிராக இந்தப் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் 44(3) பிரிவு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வெளிப்படைத்தன்மையை நீா்த்துப்போகச் செய்வதாக உள்ளது. குறிப்பாக, பயனாளிகளின் தரவுகள், வருகைப் பதிவேடுகள், சமூக தணிக்கைப் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே வெளியிட அனுமதிக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 4 மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்கும் சமூக தணிக்கை பதிவுகள், பயனாளிகள் தரவுகள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 ஆகிய பிரிவுகளை நீா்த்துப்போகச் செய்வதாக உள்ளது.

எனவே, எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ, அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 19(1) மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாக அறிவித்து சட்டப் பிரிவை ரத்து செய்வதோடு, தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 8(1)(ஜே)-ஐ மீட்டெடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தி உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுவை திங்கள்கிழமை பரிசீலித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநில அரசையும் வாதியாக சோ்க்க உத்தரவிட்டனா்.