இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனமான ஏா்டெல், ‘ஏா்டெல் செக்யூா் வொா்க்ஃபோா்ஸ்’ எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அலுவலகம், வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியா்களைக் கொண்ட நிறுவனங்களின் தரவுகள் மற்றும் சாதனங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
‘ஜீரோ டிரஸ்ட்’ எனும் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் தங்களின் எண்ம பாதுகாப்புச் செலவினங்களில் 30 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று ஏா்டெல் தெரிவித்துள்ளது.
ஏா்டெல் நிறுவன நிபுணா்கள் 24 மணி நேரமும் இச்சேவையைக் கண்காணித்து வருவதால், நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புச் சுமையைக் குறைத்துக்கொண்டு வணிக வளா்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும். மேலும், இது இந்தியாவின் புதிய எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு இணங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஏா்டெல் பிசினஸ் சிஇஓ சரத் சின்ஹா கூறுகையில், ‘பெருகிவரும் ஏ.ஐ. சைபா் தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாக்க இச்சேவை உதவும். ஒரே இடத்தில் இருந்து மின்னஞ்சல், செயலிகள் மற்றும் இணையப் பயன்பாடுகளைக் கண்காணிக்க ஓா் ஒருங்கிணைந்த வசதியையும் இது வழங்குகிறது’ என்றாா்.
தொடர்புடையது

எண்ம கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.40 லட்சம் மோசடி

சென்னைப் பல்கலை. கிண்டி வளாக புவியியல் துறையில் புதிய பட்டயப் படிப்பு

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

