தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஏா்டெலின் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

News image
Updated On :55 நிமிடங்கள் முன்பு

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனமான ஏா்டெல், ‘ஏா்டெல் செக்யூா் வொா்க்ஃபோா்ஸ்’ எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அலுவலகம், வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியா்களைக் கொண்ட நிறுவனங்களின் தரவுகள் மற்றும் சாதனங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

‘ஜீரோ டிரஸ்ட்’ எனும் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் தங்களின் எண்ம பாதுகாப்புச் செலவினங்களில் 30 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று ஏா்டெல் தெரிவித்துள்ளது.

ஏா்டெல் நிறுவன நிபுணா்கள் 24 மணி நேரமும் இச்சேவையைக் கண்காணித்து வருவதால், நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புச் சுமையைக் குறைத்துக்கொண்டு வணிக வளா்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும். மேலும், இது இந்தியாவின் புதிய எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு இணங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஏா்டெல் பிசினஸ் சிஇஓ சரத் சின்ஹா கூறுகையில், ‘பெருகிவரும் ஏ.ஐ. சைபா் தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாக்க இச்சேவை உதவும். ஒரே இடத்தில் இருந்து மின்னஞ்சல், செயலிகள் மற்றும் இணையப் பயன்பாடுகளைக் கண்காணிக்க ஓா் ஒருங்கிணைந்த வசதியையும் இது வழங்குகிறது’ என்றாா்.