சாதி பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
ஜாதி முறையை உருவாக்கியவா்கள் தற்போது உயிருடன் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும். வசதி படைத்தவா்கள், வசதி இல்லாதவா்கள் இடையிலான இடைவெளியை சரிசெய்வதில் நாடு கவனம் செலுத்த வேண்டும்.
எந்தவொரு நபரும் தனது சொந்த நலன் குறித்து மட்டுமே சிந்திக்கக் கூடாது. அனைத்து பாகுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து நிற்பதே சமூக நல்லிணக்கத்தின் உண்மையான அடையாளம்.
நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது. கிராமங்கள் வளமடைந்தால், நாடு செழிப்படையும். சமூக நல்லிணக்கம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்று அம்பேத்கா் கூறினாா். நாட்டின் வளா்ச்சிக்கும், தனிநபரின் வளா்ச்சிக்கும் கல்வி அடித்தளமாக உள்ளது.
ஜாதி பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை

அயோத்தி ராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் முா்மு வழிபாடு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

