ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

இந்து பெண் ரமலான் நோன்பு.. வெடித்தது நாசிக் விவகாரம்: துப்புரவு பணியாளர்களாக புலனாய்வு செய்த காவலர்கள்!

இந்து பெண் ரமலான் நோன்பு இருந்தது விசாரணைக்கு உள்படுத்தப்பட்டபோது வெடித்த டிசிஎஸ் நாசிக் விவகாரம் பற்றி..

News image

கைது - பிரதி படம் - கோப்புப்படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:27 pm IST

டிசிஎஸ்-ன் நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பிபீஓ அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றியபடி காவலர்கள் பல்வேறு விவகாரங்களில் புலனாய்வு செய்து காவல்துறைக்கு அளித்த முக்கிய தகவலின் அடிப்படையில் மிகப்பெரிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து ஒன்பது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூத்த மனிதவள அதிகாரி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மிக மோசமான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

பணி அழுத்தம் காரணமாக, 20 வயது மதிக்கத்தக்க இந்து பெண் ஒருவர், ரமலான் நோன்பு கடைபிடிப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பல்வேறு கோண விசாரணையில், பணியிடத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், கட்டாயப்படுத்துதால், மதரீதியிலான அழுத்தம் போன்ற பல குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 150 பேர் வேலை செய்யும் ஒரு பணியிடத்தில், தங்கள் மகள் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து, அவரது பழக்க வழக்கங்களில் பல்வேறு மாற்றங்கள் தெரிந்ததால், அவரை பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக காவல்துறைக்கு ஒரு பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள்.

உடனடியாக, காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவரை அந்த அலுவலகத்துக்குள் துப்புரவுப் பணியாளராக அனுப்பினர். அவர்கள் அங்கு பணியாற்றியபடி, பணியாளர்களிடம் பேசிய அலுவலகத்தில் நடப்பதை தங்களது உயரதிகாரிகளுக்கு நாள்தோறும் தெரிவித்திருக்கிறார்கள்.

காவல்துறை நடத்திய புலனாய்வில், தனிஷ் ஷேக், திருமண ஆசை காட்டி பெண்களை பலாத்காரம் செய்வது, மதம் மாற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். மற்றொரு டௌஸிப் அடைர் என்பவரது செல்போனில் இந்து பெண், முஸ்லிம் ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அங்குள்ள 18 - 25 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டு மதரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகே பலரும் புகார் கொடுத்துள்ளனர்.

பெண்களை அனுமதியில்லாமல் தொடுவது, பெண்களை நிறத்தின் அடிப்படையில் விமர்சிப்பது, மதம் மாற்ற வற்புறுத்துவது, எதிர்த்தால் பணி அழுத்தம் கொடுத்து அவர்களை துன்புறுத்துவது போன்ற பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குற்றம் குறித்து புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் அடங்குவர். குற்றவாளிகளுக்கு வெளியிலிருந்து பணம் ஏதேனும் வருகிறதா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களை டிசிஎஸ் உடனடியாக பணி நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. விசாரணைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.