/

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

சாம்ராட் செளதரி - படம்: ஏஎன்ஐ

Updated On :14 ஏப்ரல் 2026, 11:02 am

பிகார் மாநிலத்தின் புதிய முதல்வராக அந்த மாநிலத்தின் துணை முதல்வர் சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், பிகார் முதல்வர் பதவியை இன்று(ஏப். 14) ராஜிநாமா செய்த நிலையில், புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிகார் மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவைத் தலைவராக சாம்ராட் செளதரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் பாஜகவின் மத்திய பார்வையாளரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார்.

பிகார் அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஏப். 14 நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நிதீஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து, கடிதத்தை ஆளுமர் சையது அடா ஹஸ்னைனிடம் அளித்தார்.

இந்த நிலையில் பிகார் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி நாளை(ஏப். 15) பதவியேற்கவுள்ளார்.

பிகார் மாநிலத்தில் பாஜவைச் சேர்ந்த முதல் முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வாகியுள்ளார்.

2023 முதல் ஜூலை 2024 வரை பிகார் மாநில பாஜக தலைவராகவும் சாம்ராட் செளதரி இருந்துள்ளதார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Samrat Chaudhary, the Deputy Chief Minister of Bihar, has been selected as the state's new Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.