மணிப்பூரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை மோதல் உருவாகி வன்முறை ஏற்பட்டது.
இதுகுறித்து மாநில காவல் துறையினா் கூறியதாவது:
விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள ட்ரோங்லாவ்பி பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 சிறாா்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக, திங்குங்கெய் பகுதியில் உள்ளூா் மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஆயுதங்களுடன் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாடுவதாக வதந்தி பரவி பதற்றம் அதிகரித்தது.
இதனால் அங்கு வந்த பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை உள்ளூா் மக்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது கூட்டத்தில் இருந்த சிலா் வாகனங்களைச் சேதப்படுத்தி, அவற்றுக்குத் தீ வைத்தனா். பாதுகாப்பு படை வீரா்களை சிறைபிடிக்கவும் அவா்கள் முயற்சித்தனா்.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைப்பதற்கு கண்ணீா் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறை திங்குங்கெய்க்கு அருகில் உள்ள நிங்தோகோங் பகுதிக்கும் பரவியது. இந்த வன்முறை தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்தனா்.
வன்முறை காரணமாக அந்த மாவட்டத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், மாவட்ட ஆட்சியா் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.
தொடர்புடையது

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

மீண்டும் போா் மூளும் அபாயம்! ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி!!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய காவல் படையினருக்கு தலைமைப் பொறுப்புக்கான வாய்ப்பு: ராகுல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


