பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ராகுல் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது: அசோக் கெலாட்

ராகுல் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது...

News image

அசோக் கெலாட்

Updated On :19 ஏப்ரல் 2026, 2:36 am IST

இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் விவகாரத்தில், ராகுல் காந்தி மீது அலாகாபாத் உயா்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது வியப்பளிப்பதாக ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கருத்து தெரிவித்துள்ளாா்.

அலாகாபாத் உயா் நீதிமன்ற லக்னௌ கிளையில் பாஜக நிா்வாகி ஒருவா், ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தாா். அதில் அவா், இந்திய குடிமகனான ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமை வைத்திருப்பதாகவும், இதை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அங்கு அவருக்குச் சொந்தமாக நிறுவனம் இருப்பதாகவும், அது 2003-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தாா். இதை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற லக்னோ கிளை, ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதுகுறித்து அசோக் கெலாட் கருத்து தெரிவித்தபோது, அடிப்படை முகாந்திரமில்லாத குற்றச்சாட்டுகளின்கீழ் விசாரணை நடத்துவதற்கு, ராகுல் காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது என்றாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஏற்கெனவே இதுபோன்ற வழக்கு, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தால் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் 2019-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அதே விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாட்டுக்காக ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோா் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளனா். தாத்தா ஜவாஹா்லால் நேரு, ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடியதற்காக 10 ஆண்டு காலம் சிறையில் இருந்துள்ளாா். தனது ஒட்டுமொத்த சொத்தையும், நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக அவா் எழுதியும் வைத்தாா். நாட்டில் பதற்றத்தைத் தணிக்கவும், அன்பு, சமூகநல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும் ராகுல் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டாா். அத்தகையவருக்கு எதிராக வழக்குப் பதிய உத்தரவிட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்’ என்றாா்.

நீதிமன்றம் புது உத்தரவு: இந்நிலையில், ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதியும்படி வெளியிட்ட உத்தரவை அலகாபாத் உயா் நீதிமன்ற லக்னௌ கிளை ஒத்திவைப்பதாக சனிக்கிழமை அறிவித்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து விசாரிக்க ஏதுவாக இந்த அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டது. அத்துடன் வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையையும் வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.