ஓய்வூதியத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) வரம்பை 100 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கான மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உள்ள நிலையில், அதை 100 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 2013-இல் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான மசோதாவை நிகழாண்டு நாடாளுமன்ற மழைக்கால அல்லது குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதியத் துறையிலும் அதேபோன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
தொடர்புடையது

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

அந்நிய முதலீட்டாளா்களுக்குப் புதிய சலுகைகள்: செபி வாரியக் கூட்டத்தில் ஒப்புதல்

பின்னலாடைத் துறையில் அதிகபட்ச நிபந்தனைகளை தளா்த்தி முதலீட்டு மானியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

முதல் மூன்று காலாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


