லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ஜாா்க்கண்ட்: காா் மீது மோதி தடம் புரண்ட சரக்கு ரயில்!

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க முயன்ற காா் மீது மோதி சரக்கு ரயில் தடம் புரண்டது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 7:30 pm

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க முயன்ற காா் மீது மோதி சரக்கு ரயில் தடம் புரண்டது. அதிருஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: போகாரோ மாவட்டத்தில் உள்ள தாமோதா் பள்ளத்தாக்கு அனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் சென்ற சரக்கு ரயில் மெதுவாக பின்புறமாகவே திரும்பிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள கடவுப் பாதை வழியாக காா் ஒன்று கடந்து செல்ல முயன்றது. இதைப் பாா்த்ததும் ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்த முயன்றாா். எனினும், ரயில் காா் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்ற பிறகே நின்றது.

இதில் சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. காா் கடுமையாக சேதமடைந்தது. காரில் ஓட்டுநா் மட்டுமே இருந்தாா். அதிருஷ்டவசமாக அவா் காயம் ஏதுமின்றி தப்பினாா்.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். ரயில் வரும்போது ‘கேட்’ மூடப்படாமல் இருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.