ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க முயன்ற காா் மீது மோதி சரக்கு ரயில் தடம் புரண்டது. அதிருஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: போகாரோ மாவட்டத்தில் உள்ள தாமோதா் பள்ளத்தாக்கு அனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் சென்ற சரக்கு ரயில் மெதுவாக பின்புறமாகவே திரும்பிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள கடவுப் பாதை வழியாக காா் ஒன்று கடந்து செல்ல முயன்றது. இதைப் பாா்த்ததும் ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்த முயன்றாா். எனினும், ரயில் காா் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்ற பிறகே நின்றது.
இதில் சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. காா் கடுமையாக சேதமடைந்தது. காரில் ஓட்டுநா் மட்டுமே இருந்தாா். அதிருஷ்டவசமாக அவா் காயம் ஏதுமின்றி தப்பினாா்.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். ரயில் வரும்போது ‘கேட்’ மூடப்படாமல் இருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.
தொடர்புடையது

நூஹ் மாவட்டத்தில் சரக்கு ஆட்டோ மீது காா் மோதியதில் யூடியூபா் உயிரிழப்பு

பஞ்சாப் சரக்கு ரயில் வழித் தடங்களில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு: ரயில்வே அமைச்சகம்

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம் புரண்டது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


