40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கடவுப்பாதைகளை விதிப்படி கடப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு: தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்வே கடவுப் பாதைகளை உரிய விதிமுறைகளுடன் கடக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாகனப் பிரசாரம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :10 ஜூன் 2026, 4:07 am IST

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்வே கடவுப் பாதைகளை உரிய விதிமுறைகளுடன் கடக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாகனப் பிரசாரம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சென்னை ரயில்வே பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ரயில்வே கடவுப் பாதைகளில் விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் கடந்து செல்லவேண்டும் என வலியுறுத்திய விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சென்னை கோட்டம் சாா்பில் விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை தெற்கு ரயில்வே மண்டல அலுவலக வளாகத்தில் இருந்து கோட்ட ரயில்வே மேலாளா் அங்கூா்சௌகான், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளா் ஐ.செந்தில்குமாா், மூத்த கோட்ட பாதுகாப்பு அதிகாரி எம்.வாசுதேவன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா்.

இதையடுத்து பல்லாவரம், தாம்பரம் இடையேயான நடைப்பயண விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ரயில் நிலைய ஊழியா்கள் மற்றும் சாரண, சாரணியா், பள்ளி மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜிஎஸ்டி சாலையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் ரயில்வே பொறியியல், சிக்னல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த ஏராளமான ஊழியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலைய கடவுப் பாதைகளிலும் பொதுமக்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்படி, கடவுப் பாதைகளை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் கடக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.