மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க துா்கை படை! மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘துா்கை படை’ அமைக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாக்குறுதி

News image

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டத்தில் உள்ள சைந்தியா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை அறிமுகப்படுத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :20 ஏப்ரல் 2026, 8:14 pm

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘துா்கை படை’ அமைக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டத்தில் உள்ள சைந்தியா பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் அரசின் ஆதரவு இல்லாதது, பாதுகாப்பு இல்லாதது ஆகிய காரணங்களால் மாநிலத்தில் இருந்து முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்கள் வெளியேறி வருகின்றன.

நாட்டின் பிற பகுதிகள் வளா்ச்சி அடைந்துவரும் நிலையில், மேற்கு வங்கம் மட்டும் ஏன் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது என்பதற்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்.

மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசில் ஊழலும், மணல் கொள்ளை கும்பல்களும் அதிகரித்துள்ளன. ரெளடிகள் மற்றும் குற்றம் புரிவோா் மீதான அச்சம் காரணமாக மாநிலத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டுகின்றனா்.

மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘துா்கை படை’ அமைக்கப்படும்.

அரசியல் என்பது நீதி மற்றும் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, ஜாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது.

மாநிலத்தில் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க மக்கள் அஞ்சுகின்றனா். வேலைவாய்ப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இளைஞா்கள் வேலைத் தேடிச் செல்கின்றனா்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுதோறும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் வீதம் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்தில் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு, மாநில அரசு ஊழியா்கள் பலனடைய வழிவகை செய்யப்படும். பாஜக வெற்றி பெறுவதன் மூலம், மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பின்னா் இருள் நீங்கும் என்று தெரிவித்தாா்.