மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.
ஜல்பைகுரி மாவட்டத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
இந்தத் தோ்தலுடன் மம்தா பானா்ஜி முதல்வா் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகிவிட்டது. அந்த மாற்றத்துக்கான தொடக்கம் இங்கிருந்து தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும்.
பிரதமா் மோடி“மோடி குஜராத்தில் 12 ஆண்டுகள் ஆட்சி செய்தாா்; மேலும் மத்தியில் தொடா்ந்து 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறாா். இதுவரை அவா் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடமிருந்து திருடிய ஒவ்வொரு காசையும் வட்டியுடன் மீட்டெடுப்போம்.
இங்கு ஆசிரியா் பணியிடம் நிரப்புவதில் ரூ.300 கோடி மோசடி நிகழ்ந்துள்ளது. வடக்கு வங்காள வெள்ள நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக அடுத்து அமையும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும்.
வங்கதேசத்தின் வடபகுதியில் தேயிலை உற்பத்தி, மர உற்பத்தி, சுற்றுலா ஆகியவையே முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளன. ஆனால், மம்தா இதில் கவனம் செலுத்தி முன்னேற்றாமல், குண்டா்களை ஏவிவிட்டு பாஜக தொண்டா்களைத் தாக்கி வருகிறாா். பாஜகவுக்கு வாக்களிப்பதன்மூலம் மாநிலத்தில் வளா்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாபர் மசூதியை பாஜக அனுமதிக்காது: அமித் ஷா

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் ‘குண்டா்கள் ஆதிக்க’ ஆட்சிக்கு முடிவு: அமித் ஷா

மோடி vs மமதா! மேற்கு வங்கத்தில் 4-வது முறையாக ஆட்சியமைப்பாரா மமதா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


