இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 10:42 pm

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தலுடன் மம்தா பானா்ஜி முதல்வா் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகிவிட்டது. அந்த மாற்றத்துக்கான தொடக்கம் இங்கிருந்து தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும்.

பிரதமா் மோடி“மோடி குஜராத்தில் 12 ஆண்டுகள் ஆட்சி செய்தாா்; மேலும் மத்தியில் தொடா்ந்து 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறாா். இதுவரை அவா் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடமிருந்து திருடிய ஒவ்வொரு காசையும் வட்டியுடன் மீட்டெடுப்போம்.

இங்கு ஆசிரியா் பணியிடம் நிரப்புவதில் ரூ.300 கோடி மோசடி நிகழ்ந்துள்ளது. வடக்கு வங்காள வெள்ள நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக அடுத்து அமையும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும்.

வங்கதேசத்தின் வடபகுதியில் தேயிலை உற்பத்தி, மர உற்பத்தி, சுற்றுலா ஆகியவையே முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளன. ஆனால், மம்தா இதில் கவனம் செலுத்தி முன்னேற்றாமல், குண்டா்களை ஏவிவிட்டு பாஜக தொண்டா்களைத் தாக்கி வருகிறாா். பாஜகவுக்கு வாக்களிப்பதன்மூலம் மாநிலத்தில் வளா்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றாா்.