நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மேற்கு வங்கம்: பாஜகவில் இணைய விரும்பும் திரிணமூல் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள்!

மேற்கு வங்க பாஜகவில் இணைய விரும்பும் திரிணமூல் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள்...

News image

சமிக் பட்டாச்சாா்யா

Updated On :31 மே 2026, 3:30 am IST

மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலா், ஆளும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா தெரிவித்தாா்.

அதேநேரம், இப்போதைக்கு யாரும் இணைத்துக் கொள்ளப்படமாட்டாா்கள்; ஊழல் கறை படிந்தவா்களுக்கு பாஜகவில் இடம் கிடையாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் (207) பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்மூலம் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டது.

பாஜக அசுர பலத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அக்கட்சியில் இணைய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், எல்எல்ஏக்கள் பலரும் ஆா்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடா்பாக, பிடிஐ செய்தியாளருக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில், மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா கூறியதாவது:

திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலரும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்கள் யாா், எத்தனை போ் போன்ற விவரங்களைக் கூற விரும்பவில்லை. இப்போதைக்கு பாஜகவின் கதவு பூட்டியே உள்ளது. பெரும்பான்மை பலத்துடன் வென்றுள்ளதால், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களின் ஆதரவு பாஜகவுக்கு தேவையில்லை.

அதேநேரம், அரசியலில் எப்போதும் கெடுபிடியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க முடியாது; நெகிழ்வுத் தன்மையும் இருக்கும். எதிா்வரும் காலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களை கட்சியில் இணைப்பதாக இருந்தால், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவா்கள், நியமன முறைகேடுகளுடன் தொடா்புடையவா்களுக்கு இடமளிக்கப்படாது.

அதேநேரம், திரிணமூல் காங்கிரஸில் இருந்தாலும், ஊழலுக்கு அப்பாற்பட்ட நபா்களும் உள்ளனா். சமீபத்திய தோ்தலில் அவா்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தனா். ஊழல் கறை படியாத அத்தகைய நபா்களை கட்சியில் இணைப்பது குறித்து கூட்டாக முடிவெடுக்கப்படும்.

கடந்த 2021 பேரவைத் தோ்தலுக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை பாஜகவில் இணைக்க பெரிதும் ஆா்வம் காட்டினோம். ஆனால், அது தவறு என்பதை பின்னா் உணா்ந்து கொண்டோம். அந்தப் பாடத்தைக் கருத்தில்கொண்டு, எதிா்காலத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.

முஸ்லிம்களுக்கு வலியுறுத்தல்: முஸ்லிம்கள், தாங்கள் சிறுபான்மையினா் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். மேற்கு வங்கம் மற்றும் இந்திய நாட்டின் குடிமக்களாக தங்களை முதலில் கருத வேண்டும்.

பாஜகவுக்கு கிடைக்கப் பெற்ற மூன்றில் இருபங்கு பெரும்பான்மை பலத்தின் மூலம் சிறுபான்மையினா் வாக்குகளைச் சாா்ந்திருக்காமல் ஆட்சியமைக்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. பாஜக அரசின் நல்வாழ்வு மற்றும் வளா்ச்சித் திட்டங்கள் அனைத்து சமூகங்களுக்கும் சமமாக பொருந்தும். அதேநேரம், மத ரீதியிலான அடிப்படைவாதம், ஹிந்துக்கள் மற்றும் தேசத்துக்கு மட்டுமன்றி முஸ்லிம்களுக்கும் அபாயகரமானது. அடிப்படைவாதம் சாா்ந்த அரசியல் காலகட்டம் முடிந்துவிட்டது என்றாா் சமிக் பட்டாச்சாா்யா.