எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மேற்கு வங்கம்: 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கத்தில் 11 மணி நிலவரம்...

News image

வாக்குப்பதிவு - PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 6:19 am

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 41.11சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் இன்று காலை தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

16 மாவட்டங்களில் உள்ள 152 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி, 3.60 கோடி வாக்காளர்களில் 41.11 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,

11 மணி நிலவரப்படி 41.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக முதல் இரண்டு மணி நேரத்தில் 18.76 சதவிகித வாக்குகள் பதிவானது.

அதிகபட்சமாக பாங்குரா சட்டப்பேரவைத் தொகுதியில் 43.22 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சேர்கஞ்ச் தொகுதியில் 41.59 சதவீதமும், மேற்கு மேதினிபூர் மாவட்டத்தின் சந்திரகோனா தொகுதியில் 46.61 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

மிகக் குறைந்த அளவாக, கூச் பெஹார் தெற்குத் தொகுதியில் 38.67 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மால்டா மாவட்டத்தின் சஞ்சல் தொகுதியில் 38.22 சதவீதமும், ஹரிச்சந்திரபூர் தொகுதியில் 37.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அவற்றைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.

294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465). இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Summary

The Election Commission of India has stated that, as of 11:00 AM today, 41.11 percent of votes have been recorded in the state of West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.