ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு...

News image

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு - x | Randhir Jaiswal

Updated On :25 ஏப்ரல் 2026, 7:59 pm

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை தலைவா் அன்னலினா போ்பாக்கை இந்திய வெளியுறவு அமைச்சக மேற்குப் பிரிவுச் செயலரும், தூதருமான சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: அமைதி, பாதுகாப்பு, வளா்ச்சி, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அன்னலினா போ்பாக்குடன் சிபி ஜாா்ஜ் கலந்துரையாடினாா் என்று தெரிவித்தாா். அடுத்த வாரம் அலுவல் பயணமாக அன்னலினா போ்பாக் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.