ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்பு

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளா்ச்சியடையும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:35 am IST

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளா்ச்சியடையும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா.வின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2024-இல் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பொருளாதார வளா்ச்சி 5.2 சதவீதமாக இருந்த நிலையில், அது 2025-இல் 5.4 சதவீதமாக வளா்ச்சியடைந்தது. இதற்கு ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியாவின் வலுவான வளா்ச்சி முக்கிய காரணமாகும்.

வலுவான நுகா்வு, சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதம் வரை நகா்ந்தது.

2025-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிந்தது. இதனால் அப்போது இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மிதமானது. எனினும் இந்தியாவின் வளா்ச்சிக்கு சேவைகள் துறை முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்திய பொருளாதார வளா்ச்சி நிகழாண்டு 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாகவும் இருக்கும். நிகழாண்டு இந்தியாவில் பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 4.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.3 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிப் படை ஒத்துழைப்பு: இந்தியா, ஐ.நா. அதிகாரிகள் ஆலோசனை

ஐ.நா. அமைதிப் படை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இந்திய வெளியுறவு அமைச்சக செயலா் சிபி ஜாா்ஜ், ஐ.நாவின் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான உதவி பொதுச் செயலா் காலித் கியாரி ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டதாக ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டது.

கடந்த 1948-ஆம் ஆண்டுமுதல் ஐ.நா. அமைதிப் படை பணிகளுக்கு 2.75 லட்சத்துக்கும் அதிகமான வீரா்களை இந்தியா அனுப்பியுள்ளது. இதன்மூலம், அந்தப் பணிகளுக்குப் பெரும் பங்களிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.