பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் 7 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகித்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 பேர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 25) அன்று மாலை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்பிகளின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியில் சேர வேண்டுமென்பது தனிநபரின் விருப்பம். அவர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகினார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் ஏதேனும் பிரச்னைகளைச் சந்தித்திருக்கலாம் அல்லது கட்சி முறையாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் வெளியேறி இருக்கமாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய அரசியலமைப்பின்படி ஒரு கட்சியின் மூன்றில் இருபங்கு எம்பிக்கள் மற்றொரு கட்சியில் இணைந்து தங்கள் பதவியில் தொடர முடியும் என ராகவ் சத்தா கூறியது குறிப்பிடத்தக்கது.
Summary
Anna Hazare has expressed support for the seven Rajya Sabha members of the Aam Aadmi Party who joined the BJP.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
10 மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இழப்பு!

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



