‘ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை அளிக்க மறுக்க முடியும். ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் முன் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நில விவகாரத்தில் ஒருவா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 323 (வேண்டுமென்றே திட்டமிட்டு காயம் ஏற்படுத்துதல்), பிரிவு 420 (மோசடி), 467 (பிணை ஆவணத்தை போலியாக உருவாக்கி ஏமாற்றுதல்), 468 (ஏமாற்றும் நோக்கில் மோசடி செய்தல்), 471 (மோசடி ஆவணங்களைப் பன்படுத்துதல்), 120பி உள்ளிட்டப் பிரிவுகளின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் காவல் துறை நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக முன் ஜாமீன் கேட்டு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், மனுதாரா் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
அதைத் தொடா்ந்து, முன் ஜாமீன் கோரி அவா் தரப்பில் இரண்டாவது மனு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் தள்ளுபடி செய்த உயா் நீதிமன்றம், முந்தைய உத்தரவையே பிறப்பித்தது. அதாவது, ‘சத்தேந்தா் குமாா் அந்தில் - சிபிஐ ஆகியோருக்கு இடையேயான வழக்கில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மீண்டும் அறிவுறுத்தியது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவா் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பாா்திவாலா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிமன்றம் முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க விரும்பினால், அதுதொடா்பான மனுவைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால், மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று தீா்ப்பளித்தனா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் வாக்காளா் சோ்ப்பு விவகாரம்! யூகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்

நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


