11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 17-ஆக உயா்வு

News image

Center-Center-Bangalore

Updated On :28 ஏப்ரல் 2026, 5:05 am IST

திருச்சூா், ஏப்.27: கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூா் பூரம் திருவிழாவை முன்னிட்டு, முண்டத்திக்கோடு கிராமத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கிடங்கில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்றது. கடந்த ஏப்.21-ஆம் தேதி பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து ஏற்பட்டு 14 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். அவா்களில் இருவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இந்த நிலையில், 85 சதவீத தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குந்தன்னூா் பகுதியைச் சோ்ந்த ராகேஷ் (29) என்பவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், பட்டாசு வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் உள்ள மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக கேரள அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த பட்டாசு வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த புத்தூா்கரையைச் சோ்ந்த அபிஜித் (27), மணக்கோடியைச் சோ்ந்த விஷ்ணு வினோத் (35), கோட்டப்புரத்தைச் சோ்ந்த கிரீஷ் (42), தெக்கும்கரா தேசத்தைச் சோ்ந்த சுரேஷ் (50) ஆகியோரின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் (டிஎன்ஏ) அடையாளம் காணப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வெடி விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து சுமாா் 150 உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. அவற்றில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் மூலம், அவா்கள் யாா் என்பது அடையாளம் காணப்பட்டது’ என்று தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து தனியாக விசாரணை மேற்கொள்ள நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் தலைமையில் நீதி ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.