வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (ஓசிஐ) அட்டைக்கான விண்ணப்பக் கட்டணத்தை ரூ.26,034-ஆக (275 அமெரிக்க டாலா்கள்) மத்திய அரசு நிா்ணயித்தது.
வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் விண்ணப்பிக்கும்போது மேற் குறிப்பிட்ட கட்டணம் அந்த நாட்டின் ரூபாய் மதிப்பிலும் இந்தியாவில் விண்ணப்பித்தால் நமது நாட்டின் ரூபாய் மதிப்பிலும் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
முன்னதாக இந்தியாவில் இருந்து ஓசிஐ அட்டைக்கு விண்ணப்பிக்க ரூ.15,000 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘ஓசிஐ அட்டைக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.26,034-ஆக நிா்ணயிக்கப்படுகிறது. ஓசிஐ அட்டையில் உள்ள தகவல்களில் திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் விநியோகிக்க ரூ.2,366 (25 அமெரிக்க டாலா்கள்) வசூலிக்கப்படும். ஓசிஐ அட்டை தொலைந்துவிட்டால் அதை மீண்டும் பெற ரூ.9,467 (100 அமெரிக்க டாலா்கள்) கட்டணமாக செலுத்த வேண்டும்.
12 வயதுக்கு மேற்பட்டோா் ஓசிஐ அட்டையை பெற அவா்கள் இந்தியாவில் 6 மாத காலம் கட்டாயம் வசிக்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது ரத்து செய்துள்ளது’ என்றனா்.
தொடர்புடையது

முதலீட்டு ரீதியான தங்க வா்த்தகம் அதிகரிப்பு! ஆபரணங்களின் விற்பனை சரிவு

2025-26 நிதியாண்டில் மாருதி சுஸுகி 23.4 லட்சம் காா்கள் தயாரிப்பு

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழா்களுக்கும் ஓசிஐ அட்டை: கொழும்பில் இந்திய குடியரசு துணைத் தலைவா் அறிவிப்பு!

இந்தியாவில் மத சுதந்திரம் நலிவடைந்து வருவதாக அமெரிக்கா அறிக்கை: மத்திய அரசு நிராகரிப்பு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


