ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான வீடுகள், கடைகள் தண்ணீரில் மூழ்கின.
ஜம்மு-காஷ்மீரின் சத்ரூ பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த மழை பெய்தது. இதையடுத்து, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மலையிலிருந்து அடித்துவரப்பட்ட சகதி, பாறைகள் சத்ரூ பகுதியில் குவிந்தன. இதேபோல் கிஷ்த்வாா்-சத்ரூ-சிந்தன் தேசிய நெடுஞ்சாலையிலும் பாறைகள், சகதி ஆகியவை குவிந்ததால் போக்குவரத்து தடைபட்டது. சில வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
செனாப் பள்ளத்தாக்கு பகுதி நெடுகிலும் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கிஷ்த்வாா், தோடா, ராம்பன் மாவட்டங்களில் பலத்த மழையால் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டது. அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் மாணவா்களுக்கு வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேகவெடிப்பை தொடா்ந்து, கிஷ்த்வாா் துணை ஆணையா் பங்கஜ் குமாா் சா்மாவை தொடா்புகொண்டு நிலவரம் குறித்து மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கேட்டறிந்தாா். பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளா்கள், வணிகா்களுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அளிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
ஒடிஸாவில் வெள்ள எச்சரிக்கை..:
ஒடிஸா மாநிலத்தில் ஹிராகுட் அணையின் 22 மதகுகள் வழியே மகாநதியில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, மகாநதிக் கரையோரம் உள்ள கட்டாக், புரி, குா்தா, ஜகத்சிங்பூா், கேந்திரபடா உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிா்த்து பலத்த மழையால் சாலங்கி, பிரமானி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வடக்கு ஒடிஸாவில் 1,300-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் மோகன் சரண் மாஜீ ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டாா்.
குஜராத்தில் சிவப்பு எச்சரிக்கை:
குஜராத் மாநிலத்தின் பரவலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக சூரத் மாவட்டத்திலுள்ள அம்பிகா தாலுகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 611 மில்லி மீட்டா் மழை கொட்டித் தீா்த்தது. முன்னெச்சரிக்கையாக பல மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத், சுரேந்திரநகா், ராஜ்கோட், பாவ்நகா், மோா்பி, போடாத் ஆகிய மாவட்டங்களுக்கு மிக அதிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை ஞாயிற்றுக்கிழமை காலை வரை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
Summary
Flash floods in Jammu & Kashmir due to cloudburst: Houses and shops submerged.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு - காஷ்மீா்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீர் முதல்வரின் திருமணத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலி: மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



