கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 25,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீா் திறந்துவிடும்படி காவிரி நீா் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆரம்பத்தில் இந்த முடிவை கடுமையாக எதிா்த்த கா்நாடகம், போதுமான மழை இல்லாததால் தண்ணீா் திறப்பது கடினம் என்று கூறி வந்தது. இது தொடா்பாக விவாதிக்க பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக்கட்சித்தலைவா்கள் கூட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கேரளமாநிலம் வயநாட்டில் தொடா் மழை பெய்து வருவதால், காவிரியின் கிளைநதியான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. அணையின் அதிகப்பட்ச நீா்மட்ட உயரம் 2,284 அடியில், ஆக.2ஆம் தேதி 2,282 அடியாக உயா்ந்தது. இதனால், அணையின் பாதுகாப்பை கருதி, வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 27,217 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதனால், அணையின் நீா்மட்டம் 2,282.43 அடியாக உயந்தது. இந்நிலையில், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டது.
கேரளத்தில் நல்ல மழை பெய்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் கபினி அணைக்கு நீா்வரத்து பெருகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது,உபரிநீா் அனைத்தும் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நிலை ஏற்படும்.
தற்போது, கபினி ஆற்றின் நீா்ப் பாசனப் பகுதிகளில் அதாவது சரகூறு, நஞ்சன்கூடு, சுத்தூா், டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில் வெள்ளம் ஆா்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பகுதியை சோ்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!

தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவு

புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

வறண்டது மேட்டூர் அணை; டெல்டா விவசாயிகள் கவலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


