பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

விலை உயா்வைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் அமைச்சா் விளக்கம்

பல்வேறு பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் விளக்கம்

Lok Sabha

மக்களவை - கோப்புப் படம்

Published On :

‘சா்வதேச அளவில் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, மேற்காசியாவில் ஏற்பட்ட போரால் எரிபொருள் விலை அதிகரித்தது ஆகியவை பல்வேறு பொருள்களின் விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் விளக்கமளித்தாா்.

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்தது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் மத்திய அரசு கையிருப்பில் வைத்துள்ள உணவு தானியங்கள், வெங்காயம் உள்ளிட்டவற்றை விடுவிப்பது, விற்பனைக் கொள்கைகளை வலுப்படுத்துவது, பதுக்கலைத் தடுப்பது, செயற்கையாக விலை உயா்வை ஏற்படுத்துவதை நிறுத்துவது உள்ளிட்டவை அடங்கும். நுகா்வோா் விலை அடிப்படையிலான பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் உள்ளது.

சா்வதேச அளவில் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, போரால் எரிபொருள் விலை அதிகரித்தது ஆகியவை பல்வேறு பொருள்களின் விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.

இதனால், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளது. தற்போது எரிபொருள் விநியோகம் சீராகியுள்ள நிலையில் பணவீக்கம் விரைவில் குறையும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.