FOLLOW US

ON GOOGLE DISCOVER

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

ஏர் இந்தியா விவகாரம்! போதைப் பொருள் சோதனையில் சிக்கிய விமானியின் ‘திடுக்’ தகவல்கள்!

போதைப் பொருள் சோதனையில் சிக்கிய விமானியின் வாக்குமூலம் பற்றி...

News image

ஏர் இந்தியா விமானம் - ANI

Updated On :13 ஆகஸ்ட் 2026, 11:04 am IST

தாய்லாந்திலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரத்தில் போதைப்பொருள் சோதனையில் சிக்கிய விமானி, விமான விபத்து விசாரணை ஆணையத்திடம் அதிர்ச்சித் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து கடந்த ஆக. 4 ஆம் தேதி 137 பயணிகள், 8 விமானப் பணிக்குழுவினருடன் இந்தியாவுக்கு வந்த ஏர் இந்தியாவின் ஏர்பஸ் ஏ320 நியோ ரக விமானம் சுமார் 300 அடி உயரத்திலிருந்து திடீரென நடுவானில் காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக திடீரென குலுங்கி, அதன்பின்னர் தில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் பூதகரமாக வெடித்த நிலையில், சம்பவத்திற்குப் பிறகு இரண்டு விமானிகளுக்கும் கட்டாய மனோவியல் பரிசோதனை நடத்தப்பட்டது.

முதல்கட்ட சோதனையில், விமானத்தின் கேப்டனான முதன்மை விமானியின் சோதனை முடிவில் ‘எதிர்மறையற்றது - not negative’ என்று வந்ததை தொடர்ந்து, ஆய்வகப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் கஞ்சா வகை போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் விமான விபத்து விசாரணை ஆணையம், இரு விமானிகளிடமும் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

போதைப் பொருள் பரிசோதனையில் சிக்கிய கேப்டனிடம் புதன்கிழமை சுமார் ஒரு மணிநேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.

விசாரணையின்போது, தூக்கமின்மைப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவித்த கேப்டன், புகேட்டில் தங்கியிருந்தபோது குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை உட்கொண்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தில்லி பயணத்தின் போது 30 முதல் 35 நிமிடங்கள் வரை விமானத்தில் தூங்கியதாக விமானி தெரிவித்துள்ளார். பின்னர், கழிப்பறை சென்றுவிட்டு திரும்பிய கேப்டன், துணை விமானி இருக்கைக்கு பின்னால் நின்று பேசிக் கொண்டிருந்தபோது குலுங்கியதாகவும், தானும் கீழே விழுந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விமானத்தில் பயணித்த விமான ஊழியர்களும் கேப்டன் கூறிய தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Summary

Air India Incident! Shocking details revealed by pilot caught in drug test!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.