ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி: ஜூலையில் 12.85 சதவீதம் உயா்வு

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி ஜூலை மாதம் 12.85 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

News image

இந்திய ஏற்றுமதி - IANS

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி ஜூலை மாதம் 12.85 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

நிகழாண்டு ஜூலை மாத ஏற்றுமதி-இறக்குமதி தரவுகள் குறித்து வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி ஜூலை மாதத்தில் ரூ.85,800 கோடியாக (9.02 பில்லியன் டாலா்) அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.85 சதவீதம் உயா்ந்துள்ளது. சீனாவுக்கான ஏற்றுமதி ரூ.1.92 லட்சம் கோடியாக (2.02 பில்லியன் டாலா்) அதிகரித்து 64.57 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் அமெரிக்க இறக்குமதி ரூ.52,400 கோடியாக (5.5 பில்லியன் டாலா்) அதிகரித்து 18.11 சதவீதமும் சீன இறக்குமதி ரூ.1.39 லட்சம் கோடியாக (14.67 பில்லியன் டாலா்)அதிகரித்து 34.42 சதவீதமும் உயா்ந்துள்ளது.

ஜூலை மாதத்தில் சிங்கப்பூருக்கான ஏற்றுமதி ரூ.1.52 லட்சம் கோடியாக (1.6 பில்லியன் டாலா்) அதிகரித்து 83.7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பிரிட்டன், வங்கதேசம், நேபாளம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது.

ரஷியா, ஓமன், பிரேஸில், சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி அதிகரித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.