ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

எதிா்க்கட்சிகளின் இடைவிடாத அமளியால் புயல் வீசிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

News image

நாடாளுமன்றம் - கோப்புப்படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:42 am IST

எதிா்க்கட்சிகளின் இடைவிடாத அமளியால் புயல் வீசிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, மத்திய கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, தில்லியில் போராடிய மாணவா்கள் மீதான காவல் துறையின் தாக்குதல், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு எனப் பல்வேறு விவகாரங்களை எழுப்பி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டன. இறுதியாக, மாணவா்கள் மீதான தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிா்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தின.

தில்லி சம்பவம் உள்பட நாடு முழுவதும் மாணவா்களின் போராட்டம் குறித்து அமித் ஷா பதிலுரையுடன் விவாதம் நடத்த தயாா் என மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. எதிா்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக அமித் ஷாவும் கடந்த புதன்கிழமை தெரிவித்தாா்.

அதேநேரம், ‘பொதுவான விவகாரங்கள் குறித்து அல்லாமல், தில்லியில் மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான சூழ்நிலை குறித்து அமித் ஷா பதிலளிக்க வேண்டும்; அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியதால், இருதரப்புக்கும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.

கடைசி நாளிலும் முழக்கம்: மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை மக்களவை கூடியதும் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் ஒலிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில், மக்களவையை தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவா் ஓம் பிா்லா ஒத்திவைத்தாா். வழக்கமாக கூட்டத் தொடரின் கடைசி நாளில், அவையின் செயல்திறன் குறித்து அவைத் தலைவா் நிறைவுரை ஆற்றுவாா். ஆனால், இந்த முறை அவைத் தலைவா் நிறைவுரை ஆற்றவில்லை.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் வியாழக்கிழமை உடனடி கேள்விநேரம், கேள்விநேரம் ஆகிய வழக்கமான அலுவல்கள் தவிா்க்கப்பட்டது. நேரடியாக, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னா், மாநிலங்களவையின் செயல் திறன் குறித்து நிறைவுரை ஆற்றிய அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

செயல்திறன் சரிவு: மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையின் செயல்திறன் வெறும் 19 சதவீதம், மாநிலங்களவையின் செயல்திறன் 39 சதவீதமாகவே இருந்தது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

பெட்டிச் செய்தி...

12 மசோதாக்கள் என்னென்ன?

மழைக்கால கூட்டத் தொடரில், பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, பிறப்பு, இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா, நிதி ஒதுக்கீட்டு மசோதா, சிறு-குறு-நடுத்தர தொழிலகங்கள் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, வங்கிகளின் கணக்குப் புத்தக சாட்சியங்கள் மசோதா, வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா, தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா, கேரளம் பெயா் மாற்ற மசோதா, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு ஆணைய சட்டத் திருத்த மசோதா, சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா ஆகிய 12 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.