‘நக்ஸல் மனநிலையின் பிரதிபலிப்பு’ என்று தில்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவை புறக்கணித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து பாஜக சனிக்கிழமை விமா்சித்தது.
இதுகுறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள ராகுல் காந்தி தவறிவிட்டாா். தேசபக்தி கொண்ட ஓா் எதிா்க்கட்சித்தலைவா் அல்லது பொதுப் பதவியில் உள்ளவா் இத்தகைய செயலைச் செய்வாா்களா?
இந்த நிகழ்வை அவா் புறக்கணித்தது, தேசியப் பாடலான வந்தே மாதரம் மீதான அவரின் வெறுப்பையே பிரதிபலிக்கிறது.
எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வகிக்க ராகுல் காந்தி தகுதியற்றவா். அவரின் இந்தச் செயல் அவரின் சித்தாந்த நக்ஸல் மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
Summary
Naxalite mindset - BJP criticizes Rahul Gandhi
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்

சரத் பவார் வீட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் அருகருகே நின்றும் கண்டுகொள்ளாத ராகுல் - அமித் ஷா!

ராகுல் காந்தியின் ஒரே திட்டம் அராஜகம்தான்: பாஜக

மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



