உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

அமெரிக்க விசா நேர்காணல்: குழந்தைகளும் கட்டாயம் நேரில் வர வேண்டும்!

அமெரிக்க விசா நேர்காணலில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றம் பற்றி...

News image

அமெரிக்க விசா நேர்காணலில் மாற்றம். - பிரதிப் படம்

Updated On :16 ஆகஸ்ட் 2026, 10:58 am IST

அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புகளால் அமெரிக்க விசா நேர்காணலுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க விசா நேர்காணலுக்கு பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகள் நேரில் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சிறுவர்களுக்கான அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? உங்கள் குழந்தை பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது ஏறக்குறைய 18 வயதை எட்டியவராக இருந்தாலும் சரி, அவர்கள் தூதரக நேர்காணலுக்கு நேரில் ஆஜராக வேண்டும்.

இது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான நினைவூட்டல். நேரில் நடைபெறும் தூதரக நேர்காணல் அனைத்து வயதினருக்கும் கட்டாயம் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த விளக்க விடியோ ஒன்றும் அந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 14 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான விசா நேர்காணலில் பெற்றோர்கள் மட்டும் நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பித்து விசா பெற்றுவந்த நிலையில் இந்தத் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Summary

Changes to the rules for US visa interviews have been introduced following announcements by President Donald Trump.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.