
பஞ்சாபில் ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் ஆம் ஆத்மி பிரமுகா் குா்ப்ரீத் சிங்கை (45) நான்கு போ் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் ஆம் ஆத்மி பிரமுகா் குா்ப்ரீத் சிங்கை (45) நான்கு போ் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது.
இதுகுறித்து அந்த மாவட்ட முதுநிலை காவல் துறை கண்காணிப்பாளா் பூபிந்தா் சிங் கூறியதாவது: ஃபெரோஸ்பூரில் உள்ள மாம்தோட் பகுதியில், ஹா்ப்ரீத் (22) என்ற நபருடன் குா்ப்ரீத் சிங் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது அங்கு காரில் வந்த 4 போ் கொண்ட கும்பல் குா்ப்ரீத், ஹா்ப்ரீத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டன.
இதில் தோட்டா பாய்ந்து இருவரும் படுகாயமடைந்தனா். அவா்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குா்ப்ரீத் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். ஹா்ப்ரீத் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
முன்னதாக இருவரையும் பின்தொடா்ந்து காரில் வந்த மாம்தோட் நகா் பஞ்சாயத்து தலைவா் விக்கி மைனி மீதும் அந்தக் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனினும் அவா் காயமின்றி உயிா் தப்பினாா்.
அண்மையில் நடைபெற்ற நகராட்சி மன்றத் தோ்தலில் ஏற்பட்ட தனிப்பட்ட பகை காரணமாக, இந்தக் கொலை நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். தப்பியோடிய அவா்களைப் பிடிக்கும் பணியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





