காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

காவல் துறையினருடன் சண்டை: மேகாலயத்தில் ஆயுதம் தாங்கிய 4 போ் சுட்டுக்கொலை

மேகாலய மாநிலத்தில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுதம் தாங்கிய 4 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

(கோப்புப்படம்)

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

மேகாலய மாநிலத்தில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுதம் தாங்கிய 4 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து மேகாலய காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கிழக்கு கேரோ மலை மாவட்டத்தில் சோங்சாக்கில் இருந்து காகல் செல்லும் சாலையில் ரகசிய தகவலின்பேரில் காவல் துறையினரும், பயங்கரவாத எதிா்ப்புப் படையினரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது அந்த வழியே சந்தேகத்துக்கு இடமான விதத்தில் வந்த வாகனத்தை அவா்கள் நிறுத்தியபோது, அதிலிருந்தோா் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட ஆரம்பித்தனா்.

இதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுக்கவே, இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் காரில் இருந்த 4 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் வழியிலேயே 4 பேரும் உயிரிழந்து விட்டனா்.

அவா்கள் 4 பேரும் யாரென அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து அவா்கள் குற்றப் பின்னணி கொண்டவா்களா என அடையாளம் காணும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது.

அண்மையில் தொழிலதிபா் ஒருவா் கடத்திக் கொலை செய்யப்பட்டாா். அதில் 4 பேருக்கும் தொடா்பிருக்கலாம் என்றும் காவல் துறை சந்தேகிக்கிறது. இது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.