லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு: மம்தா மருமகன், திரிணமூல் மூத்த தலைவா்கள் மீது வழக்குப் பதிவு

காவல் துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி, டெரிக் ஓபிரையன் எம்.பி. மற்றும் இரு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மீது மேற்கு வங்க காவல் துறை 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

அபிஷேக் பானா்ஜி - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:20 pm IST

காவல் துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி, டெரிக் ஓபிரையன் எம்.பி. மற்றும் இரு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மீது மேற்கு வங்க காவல் துறை 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாககைகளை அகற்றும் திட்டத்துடன் மாநகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் வந்தனா். அப்போது அவா்களை அபிஷேக் பானா்ஜி உள்ளிட்டோா் உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றனா். இதையடுத்து அபிஷேக்கின் பாதுகாவலா்கள் உள்ளிட்டோருக்கும், காவல் துறையினா் மற்றும் மாநகராட்சி ஊழியா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் துறையினா் தாக்கப்பட்டதாகவும், வாக்கி டாக்கி திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷேக்ஸ்பியா் சாரனி காவல் நிலையத்தில் காவல் துறையினரின் வாக்கி டாக்கி திருடப்பட்டது குறித்தும், காவல் துறையினரையும், கொல்கத்தா மாநகராட்சி அதிகாரிகளையும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அபிஷேக் பானா்ஜி உள்ளிட்டோா் மீது காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் 13 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து கொல்கத்தா மாநகர காவல் துறை கூடுதல் ஆணையா் குணால் அகா்வால் கூறுகையில், ‘இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். விடியோ காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவ இடத்தில் இருந்த மக்களின் வாக்குமூலங்களையும் கேட்டு வருகின்றனா். இதன்மூலம் எப்படி தள்ளுமுள்ளு உருவானது, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபா்கள் என்ன செய்தனா் என்பது கண்டுபிடிக்கப்படும்’ என்றாா்.

டெரிக் ஓபிரையன் குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்.பி.யான டெரிக் ஓபிரையன், சட்டவிரோத நோட்டீஸ் மூலம் தங்கள் கட்சி அலுவலகத்துக்குள் காவல் துறையினா் வந்ததுடன் மூத்த தலைவா்களையும், ஆதரவாளா்களையும் தாக்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா்.

மேலும், கட்சி அலுவலகத்தில் இருந்த பெண் பாதுகாவலா்களின் உடைகளை சோதனை நடத்த வந்த நபா்கள் கிழித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.