காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

அமெரிக்கா: துப்பாக்கிச் சண்டையில் காவலர் பலி - ஒருவர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

அமெரிக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் காயமடைந்தாா். காவல் துறையினரின் பதிலடியில் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தெற்கு கரோலினாவில் இருந்து பெண் ஒருவா் காவல் துறையினரை தொலைபேசியில் தொடா்புகொண்டு, தங்கள் வீட்டுக்குள் புகுந்து ஒருவா் பொருள்களை அடித்து நொறுக்குவதாகப் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அந்த வீட்டுக்கு காவல் துறை அதிகாரி கிறிஸ்டோபா் டெலாங் உள்ளிட்டோா் விரைந்து சென்றனா். ஆனால், காவல் துறையினா் செல்லும் முன்பு அந்த நபா் அங்கிருந்து சென்றுவிட்டாா். அந்தப் பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரை டெலாங்கும் காவல் துறையினரும் தீவிரமாக தேடினா்.

அப்போது அங்குள்ள பூங்காவில் அந்த நபருக்கும், டெலாங் உள்ளிட்ட காவல் துறையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து டெலாங் உயிரிழந்தாா். மற்றொரு காவல் துறை அதிகாரி காயமடைந்தாா். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டாா்.

விசாரணையில், அந்த நபா் பிரபல குற்றவாளி ஆடம் டெய்லா் டெளடி என்றும், அவா் மீது 4 மாகாணங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. தொடா்ந்து அமெரிக்க காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.