கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது!!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
பங்குச்சந்தை
பங்குச்சந்தை
Updated on
1 min read

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச் சந்தைகள் இன்று(பிப். 1) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,947.31 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் 500 புள்ளிகள் வரை குறைந்தது.

தொடர்ந்து பிற்பகல் 12.20 மணியளவில் சென்செக்ஸ் 1,113.48  புள்ளிகள் குறைந்து 81,453.17 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 389.20 புள்ளிகள் குறைந்து 25,029.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட் உரையில் அமைச்சர் பேசும்போது, நிதி சார்ந்த எதிர்காலங்கள் மற்றும் விருப்பங்கள் (Futures and options) வர்த்தகத்திற்கான பத்திரங்கள் பரிவர்த்தனை வரி 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் சீதாராமன் கூறினார்.

இதையடுத்து பங்குச்சந்தைகள் கடுமையாக சரிவைச் சந்தித்து வருகின்றன. பெரும்பாலாக அனைத்து துறைகளும் கடும் சரிவில் வணிகமாகி வருகின்றன.

பட்ஜெட் தாக்கலையொட்டி இன்று பங்குச்சந்தைகள் செயல்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Summary

Markets in deep red on Budget day: Sensex falls 1,000 pts from day’s high, Nifty below 25,050

பங்குச்சந்தை
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 'செக்' வைத்த பட்ஜெட்!
பங்குச்சந்தை
சென்னை உள்பட 7 நகரங்களில் அதிவேக ரயில் பாதை! - பட்ஜெட்டில் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com