இந்தியா மீதான வரியைக் குறைத்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், எனது அன்பு நண்பர் டிரம்ப்புடன் இன்று உரையாடினேன். இனிமேல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் மீதான வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த அற்புதமான அறிவிப்புக்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப்புக்கு மிகப்பெரிய நன்றி.
இரு பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது, மக்களுக்கு பெரிதும் நன்மை அளிக்கும்.
உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் டிரம்ப்பின் தலைமை முக்கியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது.
நமது கூட்டணியை முன்னெப்போதும் இல்லாத அளவில், உயரத்துக்குக் கொண்டுசெல்ல அவருடம் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட நிலையில், 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, விவசாயம், நிலக்கரி உள்பட பல பொருள்களை வாங்குவதற்கும் பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், வெனிசுவேலாவிருந்தும் அதிக எண்ணெய் வாங்கவும் பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாகவும் டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Big thanks to Trump for this wonderful announcement, says PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை திசைதிருப்ப டிரம்ப் முயற்சி! - ஈரான் குற்றச்சாட்டு!

ஜி7 உச்சிமாநாட்டுக்கிடையே அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டம்!
பிரதமர் மோடி நல்ல நண்பர்: இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள டிரம்ப் விருப்பம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




