பிகார் பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

பிகார் பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ் பற்றி...
தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ் ANI
Updated on
1 min read

பிகார் சட்டப்பேரவை கூட்டத்துக்கு சக்கர நாற்காலியில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வருகைதந்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநர் உரையாற்றி வருகிறார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார் அளித்த வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே, பாட்னா மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவியின் மர்ம மரணம் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று காலை சக்கர நாற்காலியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி, காலில் சிறிய காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Summary

Tejashwi Yadav arrived at the Bihar Assembly in a wheelchair!

தேஜஸ்வி யாதவ்
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளியும் அதிரடி குறைவு..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com