தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்துக்கான நிதியை குறைத்தது ஏன்?

இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், மங்கோலியா நாடுகளுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வங்கதேசத்துக்கு குறைத்தது ஏன்? என்பது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 3:43 pm

2026 - 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அண்டை நாடுகளின் மேம்பாட்டு உதவியாக ஒதுக்கப்படும் நிதியில் வங்கதேசத்துக்கான பங்கு குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், மங்கோலியா நாடுகளுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்துக்கு ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இத்தொகை ரூ. 120 கோடியாக இருந்தது.

அதிகபட்சமாக பூடானுக்கு ரூ. 2288 கோடியும், அடுத்தபடியாக நேபாளத்துக்கு ரூ. 800 கோடியும், மாலத்தீவுக்கு ரூ. 550 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வெளியுறவுத் துறைக்கு மொத்தமாக ரூ. 22,118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்டை நாடுகளுடனான மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் வங்கதேசத்துகான தொகையை மத்திய அரசு குறைத்துள்ளது.

வங்கதேச சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராக தலைநகர் தாகாவில் ஏற்பட்ட கலவத்தின் விளைவாக இந்த பட்ஜெட் பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2024 ஆம் ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில், தனது நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இடைக்கால ஆட்சியிலும் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது வன்முறைகள் அதிகரித்துள்ளன.

மேலும், முகமது யூனுஸ் ஆட்சியானது பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் எகிப்தில் நடைபெற்ற மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப்பை, யூனுஸ் சந்தித்துப் பேசினார்.

இதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்து வங்கதேசம் செல்வதற்கான சுற்றுலா விசாவிலும், வங்கதேசத்திலிருந்து இந்தியா வருவதற்கான சுற்றுலா விசாவிலும் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. மேலும் வங்கதேசத்திலுள்ள தூதரக அதிகாரிகளின் குடும்பங்களையும் திரும்ப அழைத்துள்ளது.

இந்த அரசியல் விவகாரம் விளையாட்டுத் துறையிலும் எதிரொலித்தது. ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தங்கள் அணியின் போட்டியை இந்தியாவுக்கு பதிலாக அண்டை நாடான இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசு அனுமதி கோரியிருந்தது.

இதன் விளைவாக ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த வங்கதேச அணியைச் சேர்ந்த முஸ்தாபிஸுர் ரஹ்மான் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவையெல்லாம் மத்திய பட்ஜெட்டில் எதிரொலித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

Summary

Why India slashed Bangladesh’s share of neighbourhood aid in Budget 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.