சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாப்பு: பியூஷ் கோயல்

விவசாயம், பால்வளம் பாதுகாப்பு பற்றி பியூஷ் கோயல் கூறுவது..

News image

பியூஷ் கோயல் - படம் - ஏஎன்ஐ

Updated On :4 பிப்ரவரி 2026, 1:10 pm IST

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம் மற்றும் பால்வளம் போன்ற நாட்டின் முக்கியத் துறைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று (பிப். 2) ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், இந்தியப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரியை 18 ஆகக் குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மக்களவையில் பியூஷ் கோயல் கூறுகையில்,

போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா மீதான வரி விகிதம் மிகக் குறைவானவற்றில் ஒன்றாகும்.

விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளைப் பாதுகாப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவில் பொருள்களைத் தயாரிப்போம், இந்தியாவில் வடிவமைப்போம் போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க உதவும். இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும்.

வரி விகிதம் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்ட பிறகு, அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகளில் ஏற்றுமதிக்கு ஒரு பெரிய உத்வேகம் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தமானது திறமையான இந்தியர்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரும் வாய்ப்புகளை உருவாக்கும்.

இருதரப்பினரும் தொழில்நுட்ப செயல்முறைகளை நிறைவு செய்வதில் பணியாற்றி வருவதாகவும், விரைவில் இது அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியர்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மை முன்னுரிமையாகும். மேலும், விமானப் போக்குவரத்து மற்று அணுசக்தி போன்ற துறைகளிலிருந்து இந்தியாவுக்குப் பொருள்கள் தேவை என்றும், இந்தத் துறைகளில் அமெரிக்கா ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Summary

Commerce and Industry Minister Piyush Goyal on Wednesday told the Lok Sabha that the sensitive sectors of the country, like agriculture and dairy, are completely protected in the India-US trade deal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.