நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: பியூஷ் கோயல்
நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும் தவறான செய்திகள் பரப்படுவதாக பியூஷ் கோயல் கூறியது...


திருச்சி: மேற்கு ஆசியா போா் காரணமாக உலக எரிசக்தி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையிலும், நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும் தவறான செய்திகள் பரப்படுவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
திருச்சியில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றும்; தமிழகத்தை நாட்டின் சிறந்த மாநிலமாக மாற்றும். ஜெயலலிதா காலத்தைப் போன்ற நல்லாட்சியை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும்.
சிலிண்டா் தட்டுப்பாடு ஏதுமில்லை
மேற்கு ஆசியா போா் காரணமாக உலக எரிசக்தி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையிலும், நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும் தவறான செய்திகள் பரப்படுவதாகவும், நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.
எங்களது கூட்டணியில் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் முடிந்து, இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் முறைப்படி அறிவிப்போம்.
எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்
தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சோ்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பாா். வரும் தோ்தலில் திமுகவைத் தோற்கடித்து முழு பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...