கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

பிப். 4 அன்று மக்களவையில் நடந்தது என்ன? விடியோ வெளியிட்ட கிரண் ரிஜுஜு!

மக்களவையில் பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்த விடியோவை அமைச்சர் கிரண் ரிஜுஜு வெளியிட்டுள்ளது பற்றி...

News image

மக்களவையில் பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Updated On :10 பிப்ரவரி 2026, 8:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிப். 4 அன்று மக்களவையில் எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்த விடியோ ஒன்றை அமைச்சர் கிரண் ரிஜுஜு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சீன ஆக்கிரமிப்பு குறித்த முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிப். 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. பிப். 4 ஆம் தேதி அன்று மக்களவையில் இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.

பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்ததாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியது சர்ச்சையை எழுப்பியது.

பிரதமர் மோடி அன்று மக்களவைக்கு வராதது குறித்து இரு தரப்பு எம்.பி.க்களும் பேசி வரும் நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, பிப். 4 அன்று எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்த விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பிரதமர் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பாஜக எம்.பி.க்களுடன் வாக்குவாதம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விடியோவை வெளியிட்டு "காங்கிரஸ் கட்சி, தங்கள் எம்.பி.க்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது.

அனைத்து பாஜக எம்.பி.க்களையும் தடுத்து நிறுத்தி, பெண் எம்.பி.க்களை அனுமதித்திருக்காவிட்டால் அன்று மிகவும் இழிவான காட்சிக்கு வழிவகுத்திருக்கும்.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.