6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிர்மலா சீதாராமனுடன் ஆர்பிஐ ஆளுநர் சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆர்பிஐ ஆளுநர் இடையிலான சந்திப்பு...

News image
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சந்திப்பு...- எக்ஸ்
Updated On :11 பிப்ரவரி 2026, 11:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேரில் சந்தித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப். 11) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இத்துடன், மத்திய நிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா தலைமையிலான குழுவையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

ஏற்கெனவே, கடந்த பிப். 1 அன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நிதியமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இடையிலான இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.