
நிர்மலா சீதாராமனுடன் ஆர்பிஐ ஆளுநர் சந்திப்பு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆர்பிஐ ஆளுநர் இடையிலான சந்திப்பு...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சந்திப்பு... - எக்ஸ்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேரில் சந்தித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப். 11) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இத்துடன், மத்திய நிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா தலைமையிலான குழுவையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
ஏற்கெனவே, கடந்த பிப். 1 அன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நிதியமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இடையிலான இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
Summary
RBI Governor Sanjay Malhotra met Finance Minister Nirmala Sitharaman.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







