ஆந்திரத்தில் டிவி சப்தத்தை குறைக்கச் சொன்னதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவரை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள டிட்கோ வீட்டுவசதி காலனியில் ஷேக் அகமது (வயது 27) மற்றும் அவரது மனைவி கிராந்தி வசித்து வந்தனர்.
ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் ஷேக் அகமது வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிய நிலையில், அவரது மனைவி டிவியை அதிக சப்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டிவியின் சப்தத்தை குறைக்குமாறு ஷேக் அகமது கூறிய நிலையில், அவரது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷேக் அகமதுவை அவரது மனைவி கிராந்தி கத்தியால் குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ஷேக் அகமது உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஷேக் அகமது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், கிராந்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Wife kills husband for asking him to turn down the TV volume!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









