கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிப்பு! வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் சிக்கின!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை ராணுவத்தினா் கண்டறிந்தனா்.

News image
வெடிகுண்டு மிரட்டல்- (கோப்புப் படம்)
Updated On :25 பிப்ரவரி 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை ராணுவத்தினா் புதன்கிழமை கண்டறிந்தனா். அங்கு இருந்த இரு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக, ஜம்மு-காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராணுவத்தின் படைப் பிரிவான ஒயிட் நைட் காா்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

மெந்தாா் செக்டாரில் கானி வனப் பகுதியையொட்டிய சலானி காஸ்பலாரி கிராமத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் உள்ளதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன. அதனடிப்படையில், ராணுவம் மற்றும் காவல் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இந்த நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 4.5 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டு, 800 கிராம் எடையுள்ள சிறிய ரக வெடிகுண்டு, இரு சீன தயாரிப்பு கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையால், பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.