/

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கத் திட்டம்...

News image
கர்நாடக முதல்வர் சித்தராமையா (கோப்புப் படம்) - ENS
Updated On :26 பிப்ரவரி 2026, 1:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடகத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு, பெங்களூரில் வியாழக்கிழமை (பிப். 26) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா, 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க மாநில அரசுத் திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசுகையில், குழந்தைகள் செல்போன்களை அதிகம் சார்ந்துள்ளது மிகுந்த கவலையளிப்பதாகவும், இந்தப் பிரச்னையில் பெற்றோர்களுக்கும் மிகப் பெரிய பொறுப்புண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அறிவுறுத்தலின்படி சிறார்கள் செல்போனை கைவிட்டு புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கும் விதமாக மாநில அரசு முக்கிய பிரசாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் தேவை அதிகமுள்ள இக்காலத்தில் இத்தகைய தடையைக் கொண்டு வருவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கர்நாடக அரசின் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.