இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது குறித்து...

News image
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை...- AP
Updated On :27 பிப்ரவரி 2026, 2:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கனடா பிரதமர் மார்க் கார்னி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவரின் மனைவி டயானா ஃபாக்ஸ் கார்னி ஆகியோர் வெள்ளிக்கிழமை (பிப். 27) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு மகாராஷ்டிர மற்றும் மத்திய அரசுகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதல்முறையாக இந்தியா வந்துள்ள பிரதமர் கார்னி மும்பையில் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வரும் மார்ச் 2 அன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து உரையாடவுள்ளார். மேலும், தில்லியில் நடைபெறும் இந்தியா - கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.

இதற்கு முன்பு, கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, இருநாடுகள் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பிரதமர் கார்னியின் இந்தியப் பயணம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி கனடா பிரதமர் கார்னியைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது, இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.