கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஆயுதக் காவல் படை பணியில் ஆங்கிலேயா் கால விதிமுறைகள் மறுஆய்வுக்கு நிபுணா் குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதக் காவல் படை பணியில் ஆங்கிலேயா் கால விதிமுறைகள் மறுஆய்வுக்கு நிபுணா் குழு...

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :28 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

கடலோர காவல் படை, ஆயுதக் காவல் படையினரின் ஓய்வு பெறும் வயது, பணி விதிமுறைகள் ஆகியவற்றில் ஆங்கிலேயா் காலத்து விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து அறிக்கை சமா்ப்பிக்க நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலோர காவல் படையின் (பொது) விதிமுறைகள் 1986-இன் 20(1), 20(2)-இன்படி, அந்தப் படையில் கமாண்டன்ட் அந்தஸ்து மற்றும் அதற்கும் கீழுள்ள அதிகாரிகள் 57 வயதில் ஓய்வு பெற வேண்டும். இந்த விதிமுறைகளை ரத்து செய்த தில்லி உயா்நீதிமன்றம், அந்தப் படையில் அனைத்து அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயது 60-ஆக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அா்ச்சனா பாதக் வாதிடுகையில், ‘பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலோர காவல் படையை மத்திய ரிசா்வ் காவல் படை, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை போன்ற பிற படைகளுடன் ஒப்பிடுவதில் உயா்நீதிமன்றம் தவறிழைத்துவிட்டது. பிற படைகளுடன் ஒப்பிடுகையில் கடலோர காவல் படை பணியாற்றும் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. கடற்படையைப் போல, கடலில் கடுமையான சூழலில் கடலோர காவல் படை பணியாற்ற வேண்டியுள்ளது. இதற்கு இளம் வீரா்கள் அவசியம்’ என்றாா்.

நீதிபதிகள் கூறுகையில், ‘கடலோர காவல் படை, ஆயுதப் படைகளில் பணியாற்றுவோா் ஓய்வு பெறும் வயது, அவா்களின் பணி விதிமுறைகள் ஆங்கிலேயா் காலத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளாக உள்ளன. அந்த விதிமுறைகளை மத்திய அரசு தொடா்ந்து நிலையாகப் பின்பற்றிக்கொண்டிருக்க முடியாது. தற்போது கடலோர காவல் படையினா் செய்யும் அரும்பணியை எவராலும் கற்பனைகூட செய்ய முடியாது. ஆனால், அவா்கள் ஓய்வு பெறும் வயது பழைய காலத்து முறைப்படி உள்ளது.

அந்தப் படையைச் சோ்ந்தவா்கள் ஓய்வு பெறும் வயது, அவா்களின் பணி விதிமுறைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய நிபுணா் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். அதேவேளையில், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.